Sunday, December 17, 2006

மாதங்களில் மார்கழி


இனிமையும்,இதமும் நிறைந்த ரம்மியமான இம்மார்கழி மாதத்தின் அதிகாலை நேரம் மனதுக்கு அமைதியை தருவது இயல்பே.அதனால்தானோ என்னவோ கண்ணனே மாதங்களில் நான் மார்கழியாய் இருக்கிறேன் என்கிறான்.இப்பூவுலகில் ஒரு வருடம் என்பது தேவலோகத்துக்கு ஒரு நாள்.ஆகவே இம்மார்கழி மாதம் தேவலோகத்தில் ஒரு நாளின் அதிகாலை பொழுதாகிறது.இந்த அதிகாலை நேரம் நம்மை போன்றே கண்ணனுக்கும் இனிமையாய் இருப்பதில் வியப்பேதும் இல்லையே.நாமும் இம்மார்கழி மாதத்தின் அதிகாலை இனிமையை அனுபவிப்போமாக.

No comments: