Friday, December 08, 2006

தட்டுப்பாடு

சில மாதங்களாக சமையல் எரிவாயு உருளை கிடைப்பதில் சிரமங்கள்.கழுதை தேய்ந்து கட்டெரும்பான கதையாய் எங்கள் பகுதியில் வினியோகம் செய்யும் இரு ஏஜென்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு எந்த கட்டுப்பாடுகளும் இன்றி வழங்கிய இரு வருடத்துக்கு முந்தைய நிலை மெல்ல மெல்ல இன்று மாறி 15 நாள்,20 நாள் ,21 நாளைக்கு பிறகு பதிந்தால், 21 நாட்களுக்கு பிறகு பதிந்து 10 நாள் கழித்து,இதுவும் தற்போது பதிந்து 21 நாளுக்கு பிறகு என இன்றைய தேதி வரை விநியோகம் செய்வதில் ஏற்பட்டுள்ள பரிணாம வளர்ச்சி .என்னதான் உண்மையான காரணம்.?

பத்திரிக்கைகளில் அரசின் பதிலோ தட்டுப்பாடு இல்லை என்கிறது.வீட்டு உபயோக பயன்பாடு வர்த்தக நோக்கத்திற்காக தவறாக பயன்படுத்த படுவதால் தட்டுப்பாட்டு என ஒரு காரணம்.மானியம் அளிப்பதால் இழப்பை தவிர்க்க உற்பத்தியை குறைத்ததால் தட்டுப்பாடு என ஒரு புறம் குற்றச்சாட்டு.

எது எப்படியோ சமையல் எரிவாயு உருளை சரிவர கிடைக்காமல் தாய்மார்கள் அல்லல் படுவதுதான் இன்றைய உண்மை நிலை

No comments: