Saturday, December 09, 2006

மழைக்காலம்

கடந்த ஐப்பசி மாதம் முழுதும் விடாது பெய்த மழையின் காரணமாக எங்கள் கிராமத்தில் பலர் சில நாட்களாக காய்ச்சல் மற்றும் கண்நோய் பாதித்து சிகிச்சை பெற்றவண்ணம் உள்ளனர்.

இதில் ஒரு சுவையான தகவல் என்னவெனில் இப்பொழுது வருகின்ற இதுபோன்ற காய்ச்சலுக்கு அரசாங்க மருத்துவமனைகளில்தான் மருந்து உள்ளது,அங்கு சிகிச்சை பெற்றால்தான் சரியாகிறது என்ற ஒரு தகவல் அனைவருக்கும் பரவி அரசாங்க மருத்துவமனை பக்கம் திரும்பிபார்க்காதவர்கள் கூட அங்கு தேடி செல்வதில் 6 கிமீ தூரம் உள்ள அரசு மருத்துவமனையில் மக்கள் கூட்டம் நாள்தோறும் நிரம்பி வழிவதை இன்றும் காண முடிகிறது.

கிராமத்து மக்களின் பொருளாதாரத்தை குறிப்பிட்ட அளவுக்கு இழக்க வைப்பதில் மருத்துவ செலவுகள் முக்கிய காரணமாய் உள்ளது.அரசாங்கம் இலவச தொலைக்காட்சி பெட்டியும்,இலவச சமையல் எரிவாயு இணைப்பும் வழங்குவதில் காட்டும் வேகத்தை குறைந்தபட்சம் ஒவ்வொரு பஞ்சாயத்து கிராமத்திலாவது அரசு மருத்துவமனை துவக்க விரைந்து நடவடிக்கை எடுத்தால் கிராமப்புற மக்களுக்கு பேருதவியாய் இருக்கும்.

No comments: